ஜனாதிபதி உத்தரவு – பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்ளுமாறு இராணுவத் தளபதி கோரிக்கை!

Sunday, July 18th, 2021

உடல்நலக்குறைவால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள், தமக்கான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்பதாக வீடுகளிலிருந்து வெளியேற முடியாதோருக்கு விரைவில் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி  கடந்த 16 ஆம் திகதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்தே பொதுமக்களிடம் இந்த முக்கிய கோரிக்கையை இராணுவத்தளபதி முன்வைத்துள்ளார்.

வயோதிபர்கள் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை எனின், அவர்களுக்காக ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, நடமாடும் சேவைகளூடாக  வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் விரைவில் ஊரடங்கு தளர்கிறது - வடமாகாண சுகாதார சேவைகள...
வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கே...
விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம் - சிவில் விமான போக்குவரத்து ஆணைக்...