ஜனாதிபதி ஆணைக்குழு முறைப்பாடுகளை ஏற்கும் திகதி மேலும் நீடிப்பு!

Tuesday, March 12th, 2019

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதால், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: