ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு!

Tuesday, October 24th, 2017

மத்திய வங்கி முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 27ஆம் திகதி தமது பணிகளை ஆரம்பித்த இந்த ஆணைக்குழு, ஒக்டோபர் 17ஆம் திகதியுடன் பணிகளை நிறைவு செய்து கொண்டது.இதன்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உட்பட்ட 63 சாட்சிகள் தமது சாட்சியங்களை வழங்கினர்.இந்தநிலையிலேயே அந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்துங்கள்: அடுத்த ஐந்து வருடங்களில் நிரந்தர தீர்வு- ஈ.பி.ட...
கல்வியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிப்பு!
சில மாவட்டங்களில் மின்னல் தாக்கங்கம் ஏற்படும் அபாயம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என வானிலை ...