ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி பெரும் மோசடி – அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்து!

Sunday, April 28th, 2024

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரித்துள்ள ஜனாதிபதி செயலகம் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான மோசடியாளர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், இவ்வாறான நபர்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரசாத் செனரத் என்ற அதிகாரியை +94 71 530 8032 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு, தகவல் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts: