ஜனாதிபதியை நாட்டுமக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Sunday, October 11th, 2020

பொதுமக்களுக்குத் தபால் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின் படி ஜனாதிபதி செயலகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்கள் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, பொதுமக்கள் வருகைத் தருவதன் ஊடாக ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் தபால் ஊடாகவும் தொலைப்பேசி ஊடாகவும் மக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் நோக்கில் இவ் வாறு பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு – தொலைபேசி இலக்கங்களாக – 0114354550 / 0112354550 எண்களும் தொலைநகல் இலக்கமாக  011 2348855 எண்ணும் ஒம்புட்ஸ்மேன் அலுவலக இலக்கமாக 0112338073 என்ற இலக்கமும் ஜனாதிபதி நிதியம்  இலக்கங்களாக 011235 4354 , 0112354800 / 0112354814 / 0112354815 / 0112354818), தொலைநகல் இலக்கமாக 011 2331243 என்ற இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: