ஜனாதிபதியின் எச்சரிக்கை!

Friday, February 16th, 2018

கட்சியின் தீர்மானத்தை மீறி நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை களையெடுக்க தயங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எமது கட்சியைப் பொறுத்தவரை பிரதேச, பிராந்திய மற்றும் தேசிய அரசியலுக்கென்று சில இலக்குகள் இருக்கின்றன.

ஊழல், மோசடிகளை ஒழிப்பது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பன அவற்றில் பிரதானமானவையாகும். இவற்றுக்கு முன்னுரிமை அளிப்பது கட்சியில் அனைவரினதும் கடமையாகும்.

அதேபோன்று எமது கட்சி ஆட்சியமைக்கவுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தலைவர், உபதலைவரை தேர்வு செய்யும் விடயத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் தலையீடு செய்ய முடியாது. அது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.

அவ்வாறு யாராவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடப்பதை அறிய நேர்ந்தால் அவர்களின் தராதரம் பார்க்காது கட்சியை விட்டும் களையெடுத்து விடுவேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: