ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் திணைக்களத்தின் செலவீனங்களுக்கு 1.4 பில்லியன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு!

Monday, July 29th, 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் திணைக்களத்தின் செலவினங்களை மதிப்பீடு செய்து 1.4 பில்லியன் ரூபாய் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

பொது அஞ்சல் கட்டணம், பதிவு செய்யப்பட்ட அஞ்சல் கட்டணம், எழுதுபொருட்களுக்கான செலவுகள், போக்குவரத்து செலவுகள் மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உள்ளிட்ட பல செலவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

000

Related posts: