ஜனநாயக நாட்டில் பொலிஸ் மற்றும் நீதித்துறை இல்லாமல் சட்டத்தின் ஆட்சி இல்லை – இவ்விரண்டையும் பாதுகாக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்து!
Sunday, September 4th, 2022ஒரு ஜனநாயக நாட்டில் பொலிஸும் சுயாதீன நீதித்துறையும் இல்லாவிட்டால் அது சட்டத்தின் ஆட்சியே கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அடிப்படை சட்டமான அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸ் களப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற 156வது பொலிஸ் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசு என்ற இயந்திரத்தில் பொலிஸும் நீதித்துறையும் முக்கியமானது என சுட்டிக்காட்டிய அவர் இவ்விரண்டையும் பாதுகாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
வீதியை கடக்க முற்பட்டவர் விபத்தில் பலி!
மின்சார சபைக்கு 228 மில்லியன் ரூபா நஷ்டம்!
யாழ்.மாவட்டத்தில் வீடுகளுக்கு சென்று மருத்துவ பராமரிப்பு சேவை ஆரம்பம் - சுகாதார பணிப்பாளர் விடுத்துள...
|
|