சோ. ராமசாமி, மருத்துவமனையில்

Wednesday, April 20th, 2016
மூத்த பத்திரிகையாளர் சோ. ராமசாமி, மூச்சு திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் விமர்சகர் பத்திரிகையாளர் நடிகர் என பல முகங்கள் கொண்டவர் சோ.ராமசாமி. அவ்வப்போது உடல் நல பாதிப்புக்குள்ளாகிவருகிறார்.
சமீபத்தில், மூச்சு திணறல் காரணமாக, மிகவும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று மீண்டார் சோ. அப்போது, மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அவரை சந்தித்து நலம் விசாரித்ததும், அந்த ஓடியோ வெளியானதால் ஜெயா டிவியில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் நீக்கப்பட்டதும் நடந்தேறியது.
இந்நிலையில், மீண்டும் சோ மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Related posts: