சேவையிலிருந்து விலகிய 10,000 தனியார் பேருந்து ஊழியர்கள் – அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
Saturday, January 1st, 2022சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது 50 சதவீதமளவில், நாடளாவிய ரீதியில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் பேருந்து சேவையாளர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது வரையில் சுமார் 10 ஆயிரம் சேவையாளர்கள் சேவையிலிருந்து விலகி, வேறு தொழில்களை நாடியுள்ளனர்.
இதன் காரணமாக, தனியார் பேருந்து தொழில்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமரிக்காவுடன் இலங்கை சிறந்த நல்லுறவை கொண்டுள்ளது - பிரசாத் காரியவசம்!
விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் - சுமந்திரன்!
யாழ்ப்பாணத்தில் உச்சம் பெறும் கொரோனா - ஒரே நாளில் 66 தொற்றுறுதி - மாகாண சுகாதார பணிப்பாளர் எச்சரிக...
|
|