சேதன பசளை உற்பத்திக்கான புதிய இயந்திரம் இராணுவத்தினரால் அறிமுகம்!

Thursday, July 22nd, 2021

சேதன பசளை உற்பத்திக்கு பயன்படும் இலை குழைகளை சிறு சிறு துண்டுகளாக்கும் “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” எனும் புதிய இயந்திரம் அண்மையில் இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய இயந்திரம் இராணுவத்தின் 4வது மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் படையணி மற்றும் 5வது பொறியியலாளர் சேவை படையணியின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அக்ரி ஷ்ரெடர் பிபி 1 இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 3.5 மெட்ரிக் தொன் புதர்களை 10 மில்லி மீற்றர் துகள்களாக வெட்டக் கூடிய ஆளுமை கொண்டது என இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகை இயந்திரத்தின் சந்தை விலை ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் ஆகும். ஆனால் மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் படையணி மற்றும் பொறியியலாளர் சேவை படையணியின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்த இயந்திர தயாரிப்புக்கு சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகியது.

இதை யாழ் – பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் பி.டி.எல்.ஏ.சி சிறிசேனா வடிவமைத்துள்ளார் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தம்பலகாமம் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் விஷேட குழுவினர் பிரதேச ...
யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மானத்தை ஏற்கமறுக்கும் யாழ் மத்திய பேருந்து நிலையம்!
குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் - விசேட உரையில் பிரதமர் ...