செலுத்தப்பட்டது எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் – பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Monday, July 18th, 2022பெட்ரோல் ஏற்றி வரும் கப்பல் இன்று (18) அல்லது நாளை (19) நாட்டை வந்தடைய உள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டை வந்தடைந்தவுடன் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தற்போது 100,000 ஐத் தாண்டியுள்ளது எனவும் மற்றும் பதிவு முடியும் வரை புதிய எரிபொருள் இருப்பு விநியோகம் தொடங்கப்படாது எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அகில இலங்கை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எஸ்.எஸ். பெர்னாண்டோ தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான எரிபொருள் ஜூலை 20 ஆம் திகதிமுதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61 ஆயிரத்து 587 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவ...
எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - சிக்கனம் என்பது அரசியல்வாதிகளிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண...
இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தது காட்டுத்தீ அணைக்கும் விமானங்கள்!
|
|
கொரோனாவின் இரண்டாவது அலை முதலாவது அலையிலிருந்து வேறுபட்டது - குறைபாடுகள் அனைத்தும் நாளாந்தம் தீர்க்...
முறையான குழந்தைப் பராமரிப்பு ஒழுங்குவிதிகள் இல்லாமை நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்புக்கு பெரும் இடை...
நடப்பாண்டில் பொருளாதாரம் மேலும் சுருங்கும் - 2024 இல் படிப்படியாக மீட்சியை தொடங்கும் - ஆசிய அபிவிருத...