செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் இலங்கையில் வர்ற்த்தக செயபாடுகளை ஆரம்பிக்ககும் சினோபெக் நிறுவனம்!

Wednesday, August 16th, 2023

சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் நாட்டில் தனது வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மின்சக்தி அமைச்சில்இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சினோபெக் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து குறித்த பெயர் நாமத்தின் கீழ் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தரவுகளுக்கு அமைய 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 109 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சினோபெக்குடன் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைவாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து தங்களது பெயர் நாமத்தின் கீழ் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

முடியுமாயின் அதற்கு முன்னரே குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சினோபெக் நிறுவனத்தினர் இலங்கை கனியவள கூட்டுதாபனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ள அதியுச்ச சில்லரை விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

எனினும் எந்தவொரு நிறுவனமும் இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் விலை நிர்ணயத்தை விடவும் அதிக விலையில் எரிபொருளை விற்பனை செய்ய முடியாது என எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் தங்களது வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என ஏனைய சர்வதேச எரிபொருள் நிறுவனங்களும் அறியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிழப்பிடத்தக்கது

000

Related posts: