செப்டெம்பர் ஒன்றுமுதல் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதி – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Thursday, August 26th, 2021

செப்டெம்பர் 1 ஆம் திகதிமுதல் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குள் அனுமதிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு அடுத்தவாரம்முதல் எவ்விதத் தடையுமின்றி இலங்கைக்குள் நுழைய முடியும் என அந்த அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“செப்டெம்பர் 1 முதல் கொழும்பிலிருந்து இந்தியாவின் மூன்று இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன..  அதனடிப்படையில் சென்னைக்கு வாரத்துக்கு 4 விமானங்கள், மும்பைக்கு 3 விமானங்கள் மற்றும் பெங்களூருக்கு ஒரு விமானம் என்ற ரீதியில் இயக்கப்படவுள்ளன.

அத்துடன் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வர முடியும்.

அவர்கள் விமான நிலையத்தில் பிசிஆர் சோதனை செய்ய வேண்டும். தங்களுக்கு தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் நபர்கள் நாட்டைப் பார்வையிடலாம்.

ஆனால் அவர்கள் மூன்று நட்சத்திர ஹோட்டல்களிலும் அதற்கு மேலேயும் தங்க வேண்டும். தற்போது அவர்களுக்கு சாதாரண நடைமுறைப்படி ஒரு மாத காலத்திற்கு விசா வழங்கப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இரண்டு அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!
பிம்ஸ்டெக் அமைப்பின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வ...
நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் – சுகாதார அதிகாரிகள் ...