இரண்டு வாரங்களுக்குள் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் – பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
Thursday, September 23rd, 20212020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார்.
அத்துடன் பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இம்முறை பரீட்சைக்கு 6 இலட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்ததோடு நடனம், சங்கீதம் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறாத காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடாமல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே குறித்த பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
வயது 18 நிரம்பினாலும் தாமதிக்கிறது வாக்காளர் பதிவு !
இலங்கையில் கைதான அகதிகள் மியன்மாருக்கு நாடு கடத்தப்படும் அபாயம்!
தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் நிறைவு!
|
|