சுழற்சி முறை மின் தடை இன்றுமுதல் நடைமுறையில்!

Monday, March 25th, 2019

இன்று(25) முதல் நாளாந்தம் காலை மற்றும் மாலை வேளையிலும் சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, காலை 8.30 முதல் 11.30 வரையும், அல்லது முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரையான காலப்பகுதியிலும், பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரையான மூன்று மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மேலும் இரவு வேளையில் மாலை 06.30 இலிருந்து 07.30வரை அல்லது 07.30 முதல் 08.30வரை அல்லது 08.30 இலிருந்து 09.30 வரை ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதிகரித்துள்ள மின்சார கேள்விக்கு மத்தியில் போதுமான அளவு மின்சார விநியோகத்தை வழங்க முடியாத காரணத்தினால் இவ்வாறு சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:

கனகராயன் குளத்தில் அதிகாலை கோர விபத்து - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உ...
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - பொலிஸ் ஊட...
வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு முன்மொழிவு - சுகாதார அமைச்சு தெரிவிப்பு...