சுற்றுலாத் துறையினருக்கான கடன் சலுகை காலம் நீடிப்பு – அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Wednesday, July 21st, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை சேர்ந்தவர்களுக்கான கடன் சலுகை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறைசார் தொழிலாளர்கள் சுமார் 300 மில்லியன் ரூபாவரை கடன் பெற்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் வணிக வங்கிகள் ஊடாக இந்தக் கடன் தொகையை பெற்றுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வணிக வங்கிகள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் உலக வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் சலுகைக் கடனை பெற்று, இந்த வணிக வங்கிகளின் கடனை செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
அமரர் தியாகராஜா பரமேஸ்வரியின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டு...
|
|
|


