சுற்றுலாத் துறையினருக்கான கடன் சலுகை காலம் நீடிப்பு – அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
Wednesday, July 21st, 2021கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை சேர்ந்தவர்களுக்கான கடன் சலுகை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறைசார் தொழிலாளர்கள் சுமார் 300 மில்லியன் ரூபாவரை கடன் பெற்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் வணிக வங்கிகள் ஊடாக இந்தக் கடன் தொகையை பெற்றுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வணிக வங்கிகள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் உலக வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் சலுகைக் கடனை பெற்று, இந்த வணிக வங்கிகளின் கடனை செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பருத்தித்துறை சாலைக்கு 4 புதிய இ.போ.ச பஸ்கள்!
யார் எதிர்த்தாலும் சைட்டம் மருத்துவக் கல்லூரி மூடப்படாது – டாக்டர் நெவில்!
ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு முரணான பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமு...
|
|