சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் இரண்டு கோடி 70 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு!

Monday, March 12th, 2018

பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகம் செய்த சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் காப்புறுதி அனுகூலங்களை வழங்குவதற்காக இதுவரை இரண்டு கோடி 70 இலட்சம் ரூபாவை கல்வி அமைச்சு விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காப்புறுதி வேலைத்திட்டம் ஒக்டோபர் மாதத்தில் அமுலுக்கு வந்தது. இதுவரையிலான காலப்பகுதியில் காப்புறுதி அனுகூலம் கோரி ஆறாயிரத்து தொள்ளாயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தார்கள். இதற்காக இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது

Related posts: