சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவிப்பு!

அனைத்து தரங்களுக்குமான சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று தரங்களிலும் சுமார் 5000 அதிபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். அவர்களின் நியமனக் கடிதங்களை அடுத்த மாதம் 4ஆம் திகதி வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சமூகவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் - புத்திஜீவிகள் கோரிக்கை!
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தற்போதுள்ள வைரஸை விட மிகப் பயங்கரமானதாக இருக்கும் - விஞ்ஞானிகள் உலகுக...
வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உயிரிழப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவி...
|
|