சுதந்திர தினத்தை முன்னிட்டு 619 கைதிகளுக்கு விடுதலை!

Saturday, February 4th, 2023

இலங்கையின் 75 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

அவர்கள் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை இன்றைய தினம் வெளியிடப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: