சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Monday, March 29th, 2021

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ள சகல தர மாணவர்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்றையதினம் ஆரம்பமாகின்றமை தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் முகக்கவசங்கள் அணியாமல் வாகனங்களில் பயணிப்பதற்கு இடமளிக்க கூடாது. இந்த விடயம் தொடர்பில் சகல காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றுமு; அவர் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருந்தால் அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் சாரதி, நடத்துநர் அல்லது உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: