சுகாதார வழிகாட்டல் விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சு பொலிஸாருக்கு பணிப்பு!

Wednesday, August 4th, 2021

தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சு பொலிஸ் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் இது தொடர்பிலான சோதனைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளது.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் சோதனை நடத்துமாறு பொலிஸாரிடம் போக்குவரத்து அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் பெரும்பாலான மக்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை மீறியுள்ளதாக புகார்கள் வந்ததையடுத்து குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: