சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது!

Wednesday, August 9th, 2023

அண்மைய நாட்களில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தமது அறிக்கையை சுகாதார அமைச்சரிடம் நேற்று கையளித்துள்ளது.

வைத்தியர்கள் மற்றும் நோயாளர்களின் ரகசியத் தன்மை பேணப்படுவதால் இந்த அறிக்கையை முழுமையாக வெளியிட முடியாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பொதுவான முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த அறிக்கைக்கு அமைய கடந்த நாட்களில் பதிவான மரணங்கள் அனபிலாக்டிக் (anaphylactic) அதிர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறிப்பிடப்பட்ட மருந்தின் தரம் குறித்த அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தமது பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: