சீரமைப்பு பணி: இரு மணி நேரம் தடைப்படும் 119 அழைப்பு !
Friday, January 6th, 2017எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி பொலிஸ் அவசர அழைப்பு நிலையத்தில் இரு மணி நேர சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதால் பொலிஸ் அவசர அழைப்பு நிலைய வலையமைப்பின் நடவடிக்கைகள் இருமணி நேரம் தடைப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பு நிலைய தொலைபேசி வலையமைப்பில் அடிக்கடி ஏற்படும் கோளாறை சீர் செய்யும் நோக்கிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் 09 ஆம் திகதி மு.ப. 04.00 மணி முதல் மு.ப. 06.00 மணி வரையான காலப் பகுதியில் பொலிஸ் அவசர அழைப்பு நிலைய வலையமைப்பின் புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மீளவும் ஆரம்பம் - அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் ச...
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் - அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் ம...
செல்வந்த நாடுகளில் பின்பற்றப்படும் முறைமையை இலங்கையில் அமுல்படுத்த முடியாது - பிரதமர் மஹிந்த சுட்டி...
|
|