சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கையை வந்தடைந்தார்!
Friday, July 8th, 2016சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஜீ இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து அவர் கலந்துரையாட உள்ளார்.
இலங்கையில் சீன முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் துறைமுக நகர் திட்டத்தின் முன்னேற்றங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை மையப்படுத்தியே அவரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
குறிப்பாக சீனாவின் முதலீட்டில் தலைநகர் கொழும்பில் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய வேலைத் திட்டங்களான துறைமுக நகர் திட்டம் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் தொடர்பில் தனது விஜயத்தின் போது ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனான சந்திப்பின் போது துறைமுக நகர் திட்டம் குறித்து விஷேடமாக கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
|
|