சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் – வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்றே நம்புகிறேன் – இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவிப்பு!

Monday, November 6th, 2023

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவித்துள்ளார்.

சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையுடன் பொருளாதாரதாதை உயர்த்த முதலாவதாக சீனாவே கை கொடுத்தது. சீன எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும்.

15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது. 5 மில்லியன் உணவு பொருட்களாகவும் 5 மில்லியன் மீனவர்களுக்காகவும 5 மில்லியன் வீட்டு திட்டத்திற்கும் வழங்கவுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றபோது இலங்கை கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.

சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்கே வரவேற்கிறோம்.

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங்  தலைமையிலான குழுவினர் சீன அரசின் உலர் உணவுப் பொதிகளை யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இன்றையதினம் நடைபெற்றது.

சீன அரசினால் 5000 ஆயிரம் பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் திட்டத்தின் ஆரம்பகட்டமாக யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களுக்கு 500 பொதிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சீன நாட்டு தூதரக அதிகாரிகள், யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றையதினம் பார்வையிட்டனர்.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனதூதுவர் அதனை பார்வையிட்டம் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: