சீனிக்கான வரி குறைப்பை விகாரையில் இருக்கும் போது தெரிந்து கொண்டேன் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
Saturday, December 10th, 2022
தாம் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போதே, சீனிக்கான வரி 25 சதத்தால் குறைக்கப்பட்டமை தொடர்பில் செய்தி அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிந்து கொண்டதாக போக்குவரத்து, பெருந்தெரு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற விவாதங்களின் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் ஒருவர் தனது சுயாட்சி அதிகாரத்தின் அடிப்படையில் எதனையும் செய்ய முடியாது என தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, “சந்தையில் சுய அதிகாரம் பகிரப்பட்ட குழுவொன்று உள்ளது” எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயத்தை நாடாளுமன்றம் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
4000 தொழிலாழர்களுக்கு நிரந்தர நியமனம்!
நெல் கொள்வனவிற்கு தயார் - நெல் சந்தைப்படுத்தும் சபை!
உயர்கல்வி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வெளிநாட்டு பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவேண்ட...
|
|
|


