சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023

“Shi Yan 6” எனும் சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, “Shi Yan 6” சீனக் கப்பல் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரப்பட்ட போதும், நவம்பர் மாதத்தில் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில் ;

”சீனா மிகவும் முக்கியமான நாடு. சீனாவுடன் பல மிக மிகவும் முக்கியமான உறவுகள் உள்ளன. அதேநேரம் எமது நாட்டில் மேற்கொள்ள வேண்டிய விடயங்களும் காணப்படுகின்றன. அத்துடன்,

இது மிகவும் எளிமையான பயணம் அல்ல. குறித்த காலப்பகுதியில் இதனை எதிர்கொள்வதற்கு முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும். உள்ளக நடைமுறைகளுக்கமைய திகதியினை வழங்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: