சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் – விசாரணை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்!

Tuesday, July 21st, 2020

சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மூன்று பேருக்கு பூஸா சிறைச்சாலையில் உள்ள போதை பொருள் தரகர் கொஸ்கொட தாரக மரண அச்சுறுத்தல் விடுதமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமறியல்கள் தலைமையக சிரேஸ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொஸ்கட தாரக உட்பட மேலும் சில கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட சென்ற அதிகாரிகள் மீதே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: