சிறு நெல் ஆலையாளர்களை பலபடுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன!

Sunday, January 26th, 2020

சிறு நெல் ஆலையாளர்களை பலபடுத்துவதற்காக நடைமுறை அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை நேற்று (24) கண்காணித்த அமைச்சர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறினார்.

நெல்லை கொள்வனவு செய்யும் அனைத்து உரிமைகளும் தற்போது நெல் சந்தைபடுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆகவே ஆலை உரிமையாளர்களை ஊக்குவிக்க கடன் வசதிகளை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts: