சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை தரமுயர்த்த திட்டம்!
Thursday, August 30th, 2018
நாட்டில் தற்போது இயங்கிவரும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் பல குறைபாடுகள் நிலவுவதாகவும், சில சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் வியாபார நோக்கில் இயங்கி வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எச். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சிறுவர் பாதுகாப்பு நிலையங்களைத் தரமுடையதாக அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
அனைத்து சிறுவர் பாதுகாப்பு நிலையங்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் நாடு முழுவதிலும் முறையற்ற விதத்தில் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் எச். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்,தைப்பொங்கல் திருநாள்!
3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது - நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!
மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற முத்துஐயன்கட்டுக் குளத்தின் சிறுபோக கூட்டம்!
|
|
|


