சிறுவர்களை நீதிமன்றுக்கு அழைக்காமல் வேறு இடங்களில் வைத்து சாட்சி பதிவுசெய்ய நடவடிக்கை!

Thursday, August 5th, 2021

மேல் நீதிமன்றங்களில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்காக குறிப்பிட்டதொரு தினத்தை ஒதுக்குவதற்கு நீதி சேவைகள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் முதித விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

இதுதவிர குறித்த தினத்தில் சிறுவர் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமையளித்தல், அவ்வாறான வழக்குகளை அடையாளம் காண்பதற்கான முறைமைகளை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சுற்றறிக்கை சகல மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

நீதி சேவைகள் ஆணைக் குழவினால் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்திற்கு அழைக்காமல் வேறு இடங்களில் வைத்து தொலைக்காணொளி ஊடாக சாட்சிகளை பதிவு செய்வதற்காக மத்தியநிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, சகல மாகாணங்களிலும் 9 மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதத்தில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4 ஆயிரத்து 740 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முன்வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: