சிறுபான்மை கட்சிகளுடன் அரசாங்கம் விரைவில் சந்திக்க ஏற்பாடு – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Monday, January 31st, 2022சிறுபான்மை கட்சிகளை சந்தித்து அரசாங்கம் விரைவில் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த கலந்துரையாடலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய வடக்கு – கிழக்கு கட்சிகளுக்கும், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
தற்போது நிலவும் அரசியல் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொட்டும் மழையிலும் 71வது சுதந்திர தினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டன.
நெல் சந்தைப்படுத்தல் சபையால் 22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவு!
யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!
|
|