சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு புதிய வசதி!

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழை பெற வருபவர்களை கருத்தில் கொண்டு புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அந்த வகையில் குறித்த சேவையை துரித கதியில் பெற்றுக் கொடுப்பதற்காக அதிவேக Fast Track System ஒன்றை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
நுகேகொடையிலுள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு நேற்று காலை அமைச்சர் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்த்துள்ளார்.
அந்த போக்குவரத்து மருத்துவ நிலையத்திற்கு முன்பாக மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வருபவர்கள் காலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானித்த பின்னரே குறித்த Fast Track System ஆரம்பிப்பது தொடர்பான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழைப் பெறுவதற்காக நாள்தோறும் சுமார் 800 பேர் வரையில் நுகேகொடையிலுள்ள மருத்துவ நிலையத்துக்கு வருகை தருவதாகவும், அவர்களுக்கு சிறப்பான சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|