சாரதிகளுக்கு விபத்து சார்ந்த பயிற்சிகள்!
Saturday, June 23rd, 2018
வடக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் சாரதிகளுக்கு 4 நாள் விபத்து சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக பிரதி முதன்மை ஆளணியும் பயிற்சியும் பிரிவு தெரிவித்துள்ளது.
திணைக்களங்களில் கடமையாற்றும் சாரதிகள் சில அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பது கட்டாயமானது. அப்போதுதான் விபத்துக்கள் போன்ற திடீர் நிலைமைகளில் அனைவரையும் பாதுகாக்க முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு பிரதி முதன்மை செயலரின் ஆளணியும் பயிற்சியும் பிரிவின் ஏற்பாட்டில் 4 நாள்களைக் கொண்ட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
முதலுதவி திடீர் விபத்து இயந்திர முகாமைத்துவம் போன்ற பயிற்சிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 30 தொடக்கம் 40 பேர் கொண்ட அணியினருக்கும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய அதிகாரியின் விஜயம் இரத்து!
மின்தடை தொடர்பான அறிவித்தல்!
கொரோனா தொற்று : இலங்கையின் கணக்கு மேலும் அதிகரிப்பு!
|
|