சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Monday, May 20th, 2024

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாகியுள்ளன.

அத்துடன் குறித்த கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை  நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகின.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக கடந்த 3 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: