சாதாரண தரப் பரீட்சைக்கு 650, 641 பேர் தோற்றவுள்ளனர்!
Friday, November 23rd, 2018இவ்வருடம் நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.பிரகாசன் தெரிவித்தார்.
சாதாரணப் பரீட்சைக்கு 422,850 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 233,791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர். இப்பரீட்சையானது 4,661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்காக 541 இணைப்பு நிலையங்களும் 33 பிராந்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
விசேட பரீட்சை நிலையங்களாக இரத்மலான, தங்கல்ல, சிலாபம் மற்றும் சிறைச்சாலைகள், வைத்தியசாலைகளிலும் பரீட்சை ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
Related posts:
இலவசக் காலணிகளைப் பெற மாணவர்களுக்கு வவுச்சர்!
ஏற்றிய பட்டமே எமனாகியது இளைஞனுக்கு: புத்தூரில் சோகம்!
இலங்கையின் புகையிரத சேவை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உதவிகள் வழங்கப்பட...
|
|