சவாலை திறமையாக எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளது – அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தேவையான தலைமைத்துவத்தை வழங்கும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
Thursday, May 6th, 2021நாம் ஒரு பயங்கரமான சவாலை எதிர்கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், இந்த சவாலை திறமையாக எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளதுடன், அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தேவையான தலைமைத்துவத்தை வழங்கும் என்று நான் நம்புகிறேன் என பிரதமர் மகிற்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் குழு தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின் காணொளியூடாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக எதிர்பாராத வகையில் உயிரிழப்புகள் நேர்வதுடன், நமது வாழ்க்கை, சமூகம், பொருளாதாரம், எமது கலாசாரம் பயன்பாடுகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளது. அவ்வாறாக சூழலில் மீண்டும் ஒற்றுமையாக எழுந்திடுவதற்கான சரியான தருணமாக இதனை கருதுகின்றேன்.
இந்த நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு. எமது வலயம் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. அதேபோன்று அதனை சமாளிக்கும் சக்தி தொடர்பிலும் ஆசியா பிரபலமானது. எனவே, தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில் கூட, நமது பிராந்தியமானது உலகின் மேம்பாட்டிற்கு தலைமைதாங்குவது என்பதில் ஆச்சரியமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அபிவிருத்தியடைந்துவரும் ஆசியாவிற்கு உலகை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. காலநிலை மாற்றத்திற்கு ஏற்புடைய சூழலுக்கான நிலையான பயன்பாட்டை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
எங்கள் கொள்கை சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக நிலையானதாக இருக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கான நமது வாழ்க்கை முறையை நாம் பாதுகாக்க வேண்டும். நமது பொதுவான பிரச்சினைகளை தீர்க்க கூட்டு ஒத்துழைப்பே தற்போது தேவைப்படுகிறது.
இந்த இலக்கை அடைய, இயற்கை வளங்களை மிகவும் திறமையாக பயன்படுத்த உதவும் நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை பின்பற்ற நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள பிரதமர் ‘பசுமை பொருளாதாரத்தில்’ சேவை வழங்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவத்தை இலங்கை ஏற்கனவே அடையாளங்கண்டுள்ளது. அதே நேரத்தில், பொதுத்துறை பொது சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கலை நமது அரசு துரிதப்படுத்தியுள்ளது என்றும் சட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிச் செல்வதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி உறுப்பு நாடுகளுக்கு ஆதரவளிக்கும் என்று நம்புவதாக தெரிவித்த பிரதமர் அபிவிருத்தியடைந்துவரும் ஆசியாவில் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான நகரங்களை உருவாக்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பெண்களின் அதிகாரமளித்தல் என்பது கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சமாகும் என குறிப்பிட் பிரதமர் ஒரு நியாயமான சமூகத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை நாம் அடையாளம் வேண்டும். இது தொடர்பாக ஆசிய வலயம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதிலும், அவர்களுக்காக அதிக வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் நான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|