சர்வதேச விமான நிலையங்களை திறக்க வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு கோரிக்கை!

நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களை திறப்பது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
வரும் குளிர்காலத்தில் கொரோனா தொற்று நோய் உலகளவில் பரவக்கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்தே தற்போது விமான நிலையங்களை திறக்க வேண்டாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலகளவில் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதை உலக சுகாதார அமைப்பு அறிவித்தால் மட்டுமே, விமான நிலையங்கள் ஜனவரி மாதத்திற்கு முன்பு திறக்கப்படும் என்று COVID-19 தடுப்பு பணிக்குழு குழு அறிவித்துள்ளது.
இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத்தில் கொரோனாவின் பரவல் அதிகமாக இருக்கும் என முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.
Related posts:
ஹேய்ட்டியை புரட்டிப்போட்ட சூறாவளி!
கடும் வறட்சி : தீவகத்தில் மக்களுடன் கால் நடைகள் , பயிர்கள் பெரும் பாதிப்பு!
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன - பொது பாதுகாப்ப...
|
|