சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கையை எட்ட எதிர்பார்ப்பு – பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022

சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கையை எட்டவும், நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாமினருடன் நேற்று இடம்பெற்று சந்திப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இட்டுள்ள ட்விட்டர் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாமினர் மத்திய வங்கியின் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: