சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் வழங்குநர்களின் உத்தரவாதம் – இலங்கை அரசாங்கம் வரவேற்பு!

சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இலங்கையின் கடன் நிலைத்தன்மையை அடைய உதவும் ஒரு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் தனியாருடன் பேச்சுவாத்தையிலும் ஈடுபட்டுள்ளார்.
அவர்களுடன் தொடர்ந்தும் உறவுகளை பேணிவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் இலங்கை அதிகாரிகளுடன் ஈடுபட தயாராக இருப்பதாக இலங்கையின் கடன் வழங்குநர்கள் குழு நேற்று அறிவித்தது.
இந்தியா, சீனா மற்றும் பாரிஸ் கிளப்பில் உள்ள நாடுகள் உத்தரவாதம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விற்கப்படுவதில்லை: மக்கள் சிரமம்!
வெற்றியீட்ட வேண்டுமென்ற மனநிலையில் இலங்கையின் வீரர்கள் இல்லை : அமைச்சர் நாமல் கடும் விசனம்!
பருத்தித்துறைக்கு வடக்கில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
|
|