சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிதியுதவி மேலும் விஸ்தரிப்பு!
Sunday, May 12th, 2019
சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு வழங்கவுள்ள நிதியுதவியினை மேலும் விஸ்தரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் இயக்குனர் ஜெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபையின் போது, இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையே தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத்தரும் - தோழர் தவநாதன்!
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் வெற்றி - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!
இன்று இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


