சரவணை ஆலய சிலை உடைப்பு – சந்தேகத்தில் ஒருவர் கைது!
Tuesday, March 10th, 2026
…….
யாழ்ப்பாணம் சரவணை பகுதியில் உள்ள ஆலயத்தில் சிலையை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் உள்ள உருவச்சிலையே நேற்று சேதப்படுத்தப்பட்டது.
கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
000
Related posts:
தமிழ் மக்களைக் கைவிட்டு கொழும்பைப் பாதுகாப்பதில் மல்லுக்கட்டி நிற்கும் கூட்டமைப்பு! - ஐயாத்துரை ஸ்ரீ...
13 ஆவது திருத்தச்சட்டத்தின் அத்திவாரமிட்ட பெருமை பொன் சிவகுமாரனையே சாரும் - பிரபல சட்டத்தரணி முடியப...
தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டாலும், வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூற...
|
|
|


