சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படவில்லை – அரசாங்கம் அறிவிப்பு!
Saturday, April 23rd, 2022லிற்றோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது. விலையை அதிகரிப்பதற்காக லிற்றோ எரிவாயு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நேற்று நள்ளிரவுமுதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக நேற்று நள்ளிரவுமுதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெள்ளிக்கிழமை முதல் பாடசாலை விடுமுறை!
இலங்கையை சிறந்த பாடசாலை கட்டமைப்பை கொண்ட நாடாக மாற்றுவேன் – பிரதமர்!
பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை!
|
|