சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி !

Thursday, March 11th, 2021

சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹா சிவாத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வாழ்த்துச் செய்தியில் –  “கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் காரணமாக, இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மஹா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது.

அந்த கட்டுப்பாடுகளில் இந்த முறை சிறிது தளர்வு இருந்தாலும் கடந்த வருடத்தைப் போன்றே இந்த வருடமும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி மஹா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிப்பார்கள் என்று நம்புகிறேன்.

மஹா சிவராத்திரி தின தீப ஒளி இந்து மக்களின் ஆன்மீகத்தை ஒளியூட்டுவதைப் போன்றே சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும்” என ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: