சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து பற்றுச்சீட்டின்றி பணம் அறவீடு!

Wednesday, June 20th, 2018

கிளிநொச்சி பனங்கண்டிப் பகுதியில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து பற்றுச்சீட்டுக்கள் எதுவுமின்றி பணம் அறவிடப்பட்டுள்ளதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பன்னங்கண்டி கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வட்டக்கச்சியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கியூடாகவே வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மேற்படி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்ட போது வங்கியில் வைத்தே பயனாளிகளிடம் 300 ரூபா முதல் ஆயிரம் ரூபா வரையான தொகைப்பணம் பெறப்பட்டதாகவும் அதற்கான பற்றுச்சீட்டுக்கள் எதுவும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாவட்ட சமுர்த்தி ஆணையாளருடன் தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த மாதம் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படும் போதும் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்து 1800 ரூபா பணம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் சமுர்த்தி குழுவின் நிகழ்வு என்பவற்றுக்கு அறவிடப்பட்;டதாகவும் இதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: