சமாதான நீதவான்களுக்கான நெறிமுறைகள் அடங்கிய உத்தரவுகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனைக் குழு அனுமதி!
Sunday, June 30th, 2024
சமாதான நீதவான்களுக்கான நெறிமுறைகள் அடங்கிய உத்தரவுகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனைக் குழு அனுமதி அளித்துள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இந்த குழுக் கூட்டம் இடம்பெற்ற போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளில் சமாதான நீதிவான்களின் நியமனம் இடைநிறுத்தம், அவற்றை இரத்து செய்தல் உள்ளிட்டவை தொடர்பான நெறிமுறைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சமாதான நீதவான்களை நியமிப்பதற்கு குறிப்பிட்ட முறைமைகள் எதுவும் காணப்படவில்லை எனவும் அவர்களின் தகைமைகள் குறித்து பரிசீலிக்கப்படவில்லை எனவும் நீதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் கண்டுபிடிப்பு!
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக...
யாழ். பல்கலைக்கழக களஞ்சியசாலையில் கையாடல் – கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணை!
|
|
|


