சதோச நிறுவனம் ஊடக அத்தியாவசி பொருட்களின் வீட்டு விநியோக விற்பனைச் சேவை:
Tuesday, June 1st, 2021
கோவிட் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தற்போது நடமாட்ட கட்டுப்பாடு நாடளாவ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மக்களின் வீடுகளுக்கே வநியோகித்து விற்பனை செய்யும் நடைமுறை நாடெங்கும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
நாடளாவிய ரீதியில் பல தனியார் வணிக நிறுவனங்கள் இவ்வாறு பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணியை முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில், சதோச நிறுனத்தின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வநியோகித்து விற்பனை செய்யும் ஒழுங்குகளை, நாடளாவிய ரீதியில் அரசாங்கமும் செய்துள்ளது.
இந்த பணியை மேற்கொண்டுள்ள சதோச நிறுவனத்தின் பணியாளர்கள், நிர்வாகத்தினர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆகியோருக்கு எனது நன்றிகள்!
சதோச நிறுவனத்தின் விநியோக விற்பனை சேவையைப் பெற்றுக்கொள்ள அழையுங்கள் – 1998.
Related posts:
மின்சாரத் தடையைக் கட்டுப்படுத்த விசேட மின் சட்டமூலம்!
பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி 8ஆம் திகதி!
5 வருடங்கள் வரை காத்திருப்பு - மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் மானியம் வழங்கக் கோரிக்கை!
|
|
|


