சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டு – 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு தீர்மானம்!

Thursday, February 15th, 2024

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வீசா மீறல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி 25 இலங்கையர்கள் 83 பங்களாதேஷ் பிரஜைகள், 46 இந்திய பிரஜைகள் மற்றும் 08 நேபாளி பிரஜைகள் இதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: