சட்டவிரோத செயற்பாடு: கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர்!

Tuesday, January 28th, 2020

புகையிரத திணைக்காள  உத்தியோகத்தர்களால் நல்லூர் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக கோப்பாய் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய  நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்க அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது –

கோண்டாவில் பகுதியில் உள்ள புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் அனுமதியின்றி கற்களை கொண்டுசென்று பரப்பியமை தொடர்பாக புகையிரத திணைக்காளத்தின் உத்தியோகத்தர்களினால் நல்லூர் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக கோப்பாய் காவல் நிலையத்தில் இடப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்றைய தினம் தவிசாளர் பொலிசாரால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதுடன் அனுமதியின்றி கற்களைப் போட்டது தவறென்டறு தவிசாளர் ஏற்றுகொண்டதுடன் உடனடியாக குறித்த  கற்களை அகற்றுவதாகவும் அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

Related posts: